
திருமலை: திருமலையில் கோடைக்கால தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி கூறியதாவது:
கோடைக்கால தரிசன ஏற்பாடுகளை சிறப் பாக செய்திட வேண்டும். இதில் சாமானிய பக்தர் களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த கோடையில் தினமும் 82,000 பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த ஜனவரியில் தினமும் சராசரியாக 74 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

More Stories
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா: ஜூன் 13-ம் தேதி கொடியேற்றம்
ஸ்ரீ முருகன் வைகாசி விசாக விழாக் குழுவினர் நடத்திய54 ஆம் ஆண்டு வைகாசி விசாக உத்சவ விழா