February 19, 2026

துரோகிகளை வேரறுப்போம்.. சசிகலா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். அதே நேரம் சசிகலா, ஓபிஎஸ் இருவரும் அதிமுகவில் இணைக்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி சசிகலா பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளார். இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சசிகலா
சசிகலா அறிக்கை

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னமும் இரண்டே மாதங்களே இருக்கும் நிலையில், பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களான ஓபிஎஸ், சசிகலா இருவரும் அதிரடியான முடிவுகள் எடுக்கலாம் என அரசியல் வட்டாரம் உற்றுநோக்கி கவனித்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு கொடுத்துள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24 ஆம் தேதி அதிமுக சார்பில் தேர்தல் சம்பந்தமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பரபரப்பு அறிக்கை

இதனிடையில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் சசிகலா சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது. இதில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு கொடுத்து பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார் சசிகலா.

சசிகலா அழைப்பு

அதன்படி துரோகிகளையும், எதிரிகளையும் வேரறுக்க ஒன்றுபடுவோம் என தன்னுடைய ஆதரவாளர்களுக்கு சசிகலா அழைப்பு கொடுத்துள்ளார். மதுரையில் நடைபெறவுள்ள ஜெயிலலிதா பிறந்தநாள் விழாவிற்காக ‘ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்’ என்று அழைப்பு விடுத்திருக்கிறார் சசிகலா. ஊழல் வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலாவை அதிமுகவில் இணைக்கவில்லை. இதனையடுத்து அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த அனைவரையும் ஒன்றிணைத்து ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவேன் என கூறி வந்தார்.

சட்டமன்ற தேர்தலில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா போட்டியிடுகிறாரா.. எந்த தொகுதி?

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை அதிமுகவில் இணைப்பதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரம் அமமக டிடிவி தினகரனை மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். இதனையடுத்து தற்போது அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறார் டிடிவி.

புதிய கட்சி

இந்நிலையில் அதிமுகவில் இணைக்கப்படாத சசிகலா அவ்வப்போது ஜெயலலிதா ஆட்சியை தருவேன் என கூறி வந்தார். அதோடு சமீப காலமாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களை சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தல் நிலவரம் பற்றி பேசி வருகிறார். இதனையடுத்து அவர் தனியாக புதிய கட்சி துவங்கி வரும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதனால் சசிகலாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. இந்நிலையில் துரோகிகளையும், எதிரிகளையும் வேரறுக்க ஒன்றுபடுவோம் என தற்போது சசிகலா அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது. இதனிடையில் சமீபத்தில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேர்காணல் ஒன்றில் பேசும்போது அதிமுக ஆட்சி அமைவதற்கு சசிகலா, ஓபிஎஸ் இடையூறாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love