சட்டமன்றத் தேர்தலில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியிடப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. இதில், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி விருப்ப மனு அளிக்காதது தெரியவந்துள்ளது.
இதன் மூலம், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், பொன்முடி போட்டியிடப் போவதில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1989-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முதல் 2021 ஆம் ஆண்டு வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்ட பொன்முடி 6 முறை வெற்றி பெற்று, 2 முறை தோல்விகளை சந்தித்தார்.மேலும், 3 முறை திமுகவின் அமைச்சரவையில் முக்கிய துறைகளை கவனித்து வந்த பொன்முடி, சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதால், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.2026 தேர்தலில் போட்டியிட பொன்முடி விருப்ப மனு அளிக்காத நிலையில், அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட திருக்கோவிலூர் தொகுதியில், அவரது மகன் கௌதம் சிகாமணி விருப்ப மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
அவசர ஆலோசனை கூட்டம் நடத்தும் விஜய்! தேர்தல் கருத்துக் கணிப்புக்கு பிறகு பனையூரில் குவியும் வேட்பாளர்கள்
தவெக வேட்பாளர்களுடன் சந்திப்பு.. விஜய்யின் அடுத்த திட்டம்
“வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக, கூட்டணிக் கட்சி முகவர்கள் கவனம்” – இபிஎஸ் அறிவுரை