March 23, 2026

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

“முதலமைச்சருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. டெல்லி என்றாலே திமுக-வினருக்கு நடுக்கம் ஏற்படுகிறது” – பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

அதிமுக உடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வருகிறார்.

முன்னதாக தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அடுத்தடுத்து டெல்லி சென்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஈபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயலின் சென்னை பயணம் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது.

Spread the love