26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
பழனி மார்ச் 16
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பழனியில் புகழ்பெற்றது பங்குனி உத்திரம் திருவிழாவாகும். இந்த திருவிழாவின் முக்கிய அம்சமே, பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றின் நீரை சிறு சிறு குடங்களில் சேகரித்து தீர்த்தக்காவடியாக எடுத்து வருவார்கள். பின்பு மேளதாளங்கள் முழங்க பழனி வரும் அவர்கள் தீர்த்தக்காவடி நீரை பழனி முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள். பழனி பங்குனி உத்திரம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். திருவிழா பழனி திருஆவிணன்குடி முருகன் கோயிலில் வரும் மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் மார்ச் 31 ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி பங்குனி உத்திரம் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்து வருகிறார்.

More Stories
விளாத்திகுளம் மாணவி வழக்கில் 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ. 41 லட்சம் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்த நிலையில், பழனியில் வாகன சோதனையை தொடங்கிய காவல்துறையினர்