மக்களை நாய்களுடன் ஒப்பிட்டு பேசியதாக ராகவா லாரன்ஸ் மீது விமர்சனம் வைக்கப்பட்டுவருகிறது.
ராகவா லாரன்ஸ் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறிய நாய்கள் குறித்த ஒப்பீடு, மக்களை நாய்களுடன் ஒப்பிட்டதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த அவர், மக்கள் தன் தாய்க்குச் சமம், அவர்களை நாய்கள் என்று கூறவில்லை, புதிய சூழலைப் புரிந்துகொள்ள நேரம் தேவை என்பதையே எடுத்துக்கூறினேன் எனத் தெளிவுபடுத்தினார்.
சமீபத்தில் தன்னுடைய அரசியல் வருகை குறித்து வெளிப்படுத்திய நடிகரும் சமூக சேவையாளருமான ராகவா லாரன்ஸ், பெரிய அளவில் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே எனது ஒரே எண்ணம் என்றும், தான் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்ற கருத்துகளை மக்களாகிய ரசிகர்களாகிய நீங்கள் கூறுங்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

ராகவா லாரன்ஸ்எக்ஸ் தளம்
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ராகவா லாரன்ஸ், ரோட்டில் இருக்கும் தெரு நாய்கள் கூட நம்மை பார்த்தால் கத்தும். ஒரு சில தெரு நாய்கள் பிஸ்கட் சாப்பிடாது. பிரியாணி தான் சாப்பிடும், அசைவம் தான் சாப்பிடும். அதற்கு பிடித்தவாறு உணவு கொடுக்க வேண்டும். தெரு நாய்களுக்கு இப்படி என்றால் நாட்டையே நம்பி அவர்களிடம் கொடுத்துள்ளீர்கள். மாற்றம் வேண்டும் என நினைத்து அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்தீர்கள். தற்போது மாற்றம் வந்துள்ளது. அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள்” என பேசியிருந்தார்.
அவருடைய இந்த பேச்சு மக்களை நாய்களுடன் ஒப்பிட்டதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்தசூழலில் தன்னுடைய பேச்சு தவறாக பரப்பப்படுவதாக விளக்கம் கொடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ்.

More Stories
நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடை – பொதுமக்கள் அவதி
முதலமைச்சர் விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கு:வீடியோ கான்பரன்ஸ் வேண்டாம்..நீதிமன்றம் வைத்த செக்
கடலூர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த தங்கம் தென்னரசு வலியுறுத்தல்