மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம் முன்ஜாமின் மனு மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. CBI விசாரணை நடக்கிறது.சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக இருந்த அஜித் குமார் மீது நகை காணாமல் போனதாக கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வந்த புகாரை அடுத்து, விசாரணை மேற்கொண்ட காவலர்கள் தாக்கியதால் மறுநாள் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனிடையே வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நகைத் திருட்டு என்பதே போலி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே வழக்கில் தொடர்புடைய மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

More Stories
நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கினார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்( டார்ன்காம்) மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு திறன் மையம் திறப்பு விழா.