September 16, 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.60 கோடி நிலம் முறைகேடாக விற்பனை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்துக்கு தனிநபர்கள் பெயரில் பட்டா பெற்று விற்றது அம்பலமானது. மதுரையில் உள்ள கோயில் நிலத்தை தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டத்தில் முறைகேடாக பதிவு செய்து மோசடி செய்யப்பட்டுள்ளது. கோயில் நிலத்தை  முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் அனந்தராமன், முன்னாள் தாசில்தார் அன்பழகன், முன்னாள் விஏஓ அரசன் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love