September 5, 2026

இத்தாலியின் நீண்ட கால பிரதமர் மெலோனிக்கு மோடி வாழ்த்து

புதுடெல்லி: இத்தாலியில் மிக நீண்ட காலம் பிரதம​ராக பதவி வகிக்​கும் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் நரேந்​திர மோடி வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

ஐரோப்​பிய நாடான இத்​தாலி கடந்த 1946-ம் ஆண்​டில் குடியர​சாக மாறியது. இதன்​பிறகு கடந்த 80 ஆண்​டு​களில் அங்கு 68 அரசுகள் ஆட்சி நடத்தி உள்​ளன. கடந்த 2001 ஜூன் 11-ம் தேதி முதல் 2005-ம் ஆண்டு ஏப்​ரல் 23-ம் தேதி வரை இத்​தாலி​யின் பிரதம​ராக சில்​வியோ பெர்​லுஸ்​கோனி பதவி வகித்​தார். அவர் 1,412 நாட்​கள் அந்த நாட்​டின் பிரதம​ராக நீடித்​தார்.

அவரே இத்​தாலி​யின் நீண்ட கால பிரதமர் என்ற பெரு​மை​யைப் பெற்​றிருந்​தார். கடந்த 2022-ம் ஆண்டு அக்​டோபர் 22-ம் தேதி இத்​தாலி​யின் பிரதம​ராக ஜார்​ஜியா மெலோனி பதவி​யேற்​றார். அவர் நேற்று 1,413 நாட்​களைக் கடந்து முன்​னாள் பிரதமர் பெர்​லுஸ்​கோனி​யின் சாதனையை முறியடித்​தார்.

இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இத்​தாலி​யின் நீண்ட கால பிரதமர் என்ற பெரு​மை​யைப் பெற்​றிருக்​கும் எனது நண்​பர் மெலோனியை மனதார வாழ்த்​துகிறேன். அவரது தலைமை மீது இத்​தாலி மக்​கள் மிகுந்த நம்​பிக்கை வைத்துள்ளனர். இதன்​காரண​மாகவே அவர் மிக நீண்ட காலம் பிரதம​ராக நீடிக்​கிறார்.

இரு நாடு​களைச் சேர்ந்த மக்​களின் நன்​மைக்​காக இந்த உறவு மேலும் வலுப்​படுத்​தப்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்​ளார்​. பிரதமர் மெலோனி வெளியிட்ட பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. ஐஎம்இசி வர்த்தக வழித்தட திட்டத்தை நிறைவேற்ற இத்தாலியும் இந்தியாவும் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Spread the love