August 7, 2026

இம்ரான் கான் விடுதலை கோரி போராட்​டம்: 100+ ஆதரவாளர்கள் கைது

இஸ்​லா​மா​பாத்: பாகிஸ்​தான் முன்​னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்​கக்​கோரி, நாடு முழு​வதும் போராட்​டத்​தில் ஈடு​பட்ட 100-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர். பாகிஸ்தான் முன்​னாள் பிரதமர் இம்ரான் கான், பல்​வேறு வழக்​கு​களில் கடந்த 2023, ஆகஸ்ட் 5-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார்.

சிறை​யில் அடைக்​கப்​பட்டு 3 ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், அவரை விடுவிக்​கக்​கோரி, நாடு முழு​வதும் போராட்​டத்​தில் ஈடு​பட்ட அவரது பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதர​வாளர்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் கைது செய்யப்பட்டனர்.

பிடிஐ ஆட்​சி​யில் உள்ள கைபர் பக்​துன்க்வா மாகாணத் தலைநகர் பெஷாவரில் நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தில், மாநில முதல்​வர் சுஹைல் அஃப்​ரிதி கூறிய​தாவது: கைது செய்யப்பட்டுள்ள இம்​ரான் கானை விடுவிக்க சட்ட ரீதி​யான மற்றும் நீதித்​துறை வழிகளை முழு​மை​யாகப் பயன்​படுத்​தி​விட்​டோம். நீதி கிடைக்​கா​விட்​டால், அமை​தி​யான போராட்​டம் நடத்தும் அரசி​யலமைப்​புச் சட்ட உரிமையை பயன்​படுத்​து​வோம். இம்​ரான் கான் மற்​றும் அவரது மனைவி தொடர்​பான வழக்​கு​களை விரைந்து விசா​ரித்​து தீர்ப்பு வழங்க வேண்​டும்.

அவர்​களது வழக்​கறிஞர்​கள், மருத்​து​வர்​கள், உறவினர்​கள் மற்​றும் கட்​சித் தலை​வர்​கள் இம்ரானைச் சந்​திக்​கும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும். இம்​ரான் கானை விடுவிக்காவிட்டால் செப்​.27-ம் தேதி நாடு முழு​வதும் இருந்து ஆதர​வாளர்கள் இஸ்லாமா​பாத் நோக்கி பேரணி​யாக வரு​வார்​கள். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்.

Spread the love