இராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 25 ஊரணிகளை புனரமைத்து மேம்படுத்தும் திட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர்மன்றத் தலைவர் ஆர்.கே. கார்மேகம் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்தின் மூலம் நகராட்சியில் உள்ள ஊரணிகள் புனரமைக்கப்பட்டு மழைநீர் சேமிப்பு மேம்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராமநாதபுரம்

More Stories
பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் சாலை மறியல்! ஆறுமுகநேரி .மார்.14 தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு மாற்றுதிறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க அனு கதக்க சூழலை அமைத்து தருவதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான மாட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் தாவூதிய போரா முஸ்லிம்கள் சார்பாக அப்பாஸ் ஏற்பாட்டில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு ரமலான் மாதத்தை முன்னிட்டு பிரியாணி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தாவூதிய போரா முஸ்லிம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.