August 10, 2026

ஈரோடு

ஈரோடு மாணிக்கம் பாளையம் வீட்டுவசதி வாரியத்தில்எழுந்தருளியுள்ளஅருள்மிகு ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ கன்னிமார் சுவாமி, ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ நாகம்மன் சுவாமிகள் திருக்கோயில் தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்த திருவிழா நிகழ்வினை ஈரோடு மாநகராட்சி 2 ஆம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ)மு.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பரதநாட்டிய நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். விழாவில் கவிஞர் ஈரோடு ப.இளையகோபால், கோயில் நிர்வாகிகள் K.அருண்பிரசாத், அப்பாசாமி, R.கோகிலா,கிளாசிக் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 4 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

.

Spread the love