செயின்ட் லூயிஸ்: அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் கிளப்பில் சின்க்ஃபீல்டு கோப்பைக்கான செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸின் மேக்சிம் வாச்சியர் லாக்ரேவுடன் மோதினார். இதில் பிரக்ஞானந்தா 28-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
இன்னும் ஒரு சுற்று மட்டுமே மீதம் உள்ள நிலையில் பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் முதலிடத்தை அமெரிக்காவின் வெஸ்லி சோவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போதைய வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள கிராண்ட் செஸ் டூரின் இறுதி போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார் பிரக்ஞானந்தா.

More Stories
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் வெற்றி
உலகக் கோப்பை செஸ் தொடர்: கார்ல்சென் மீண்டும் சாம்பியன்