சிடிஆர். நிர்மல்குமார்
சென்னை: குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை. அதற்கான தேவையும் எழவில்லை என்று அமைச்சர் சிடிஆர். நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: முதல்வர் விஜய் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து 144 எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ளனர்.
எந்த நோக்கத்துக்காக மக்கள் விஜய்யை முதல்வர் ஆக்கினார்களோ, அந்த எண்ணம் நூறு சதவீதம் நிறைவேற்றப்படும். சட்டப்பேரவை தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த ஆட்சியில், அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தொய்வின்றித் தொடரும்.
மற்ற கட்சித் தலைவர்களை சந்தித்தது போலத்தான் அதிமுக நிர்வாகிகளையும் விஜய் சந்தித்தார். இதில் குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான தேவையும் இல்லை.
நீட் தேர்வில் கடந்த 5, 6 ஆண்டுகளாகவே தொடர்ந்து குளறுபடிகள் நடக்கின்றன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் நடத்தப்பட்டாலும், நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எங்கள் கட்சியின் உறுதியான நிலைப்பாடு. ஒரு சாதாரண தேர்வைக் கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை.
தேர்வர்களை கடும் சோதனைக்கு உட்படுத்தும் மத்திய அரசு, வினாத்தாள் கசிவை தடுக்க இயலாத நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
“அரசு என எதுவும் உள்ளதா?” – கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி கண்டனம்
அதிமுக கப்பலை தளபதி மூழ்க விடமாட்டார்! மதுராந்தகத்தில் ஆதவ் அர்ஜுனா பேச்சு