May 19, 2026

சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக தொழிலதிபர் எம் வி எம் மருது பாண்டியன் மூன்றாவது முறையாக தேர்வு 

நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு 

சோழவந்தான் மே 19 

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர அரிமா சங்க வரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட தொழிலதிபர் எம் வி எம்  கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் தொழிலதிபர் டாக்டர் 

எம் மருது பாண்டியன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக அவரது பொது சேவையை பாராட்டி நகர அரிமா சங்கம்  தலைவராக ஏக மனதாக தேர்ந்தெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எம் மருதுபாண்டியன் கல்விச் சேவையிலும் சமூக சேவையிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் அவரது நற்பண்பை பாராட்டி அரிமா சங்கம் அவருக்கு மூன்றாவது முறையாக தலைவராக செயல்படும் வாய்ப்பினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது மூன்றாவது முறையாக சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம் மருது பாண்டியனுக்கு அரசியல் பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் சமூக ஆர்வலர்கள் ஆன்மீக அன்பர்கள் ஆசிரியர்கள் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Spread the love