சோழவந்தான் மே_16
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தனி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்டு சுமார் 2678 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்வி கருப்பையா எம்எல்ஏ வாடிப்பட்டியில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் முன்னதாக வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தையிலிருந்து தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார் அவருக்கு தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் சால்வை மற்றும் மாலைகள் அணிவித்தும் வரவேற்பு அளித்தனர் தொடர்ந்து வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார் தொடர்ந்து சமயநல்லூரில் உள்ள வீரபத்திரன் கோவிலில் சாமி தரிசனம் செய்து சமயநல்லூரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார் இதில தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

More Stories
திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உடன் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மரு.ராஜீவ் , மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு வெளிப்பொருத்தும் மற்றும் உட்ப்பொருத்தும் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடனிருந்தார்.