July 7, 2026

திறந்த மறுநாளே மூடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்: நடவடிக்கை கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 2023–24ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கட்டிடப் பணிகள் முழுமையடையாத நிலையில் திறந்து வைக்கப்பட்டு மறுநாளே மூடப்பட்டதாக கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் மருத்துவத் தேவைக்காக அமைக்கப்பட்ட இந்த சுகாதார நிலையம் இன்று வரை செயல்படாததால், அவசர சிகிச்சைக்காக தொலைதூர மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது.

Spread the love