பழனி ஜூன் 15
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், 2024 ஜூலை 1 ந் தேதி பழனி அடிவாரம் கிரி விதி அண்ணா செட்டி மடம் பகுதியில் இருந்த ரூபாய் 100 கோடி மதிப்பிலான 120 ஆக்கிரமிப்புகள் கோவில் நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால உத்தரவு மற்றும் திண்டுக்கல் கலெக்டர் உத்தரவுபடி நேற்று வருவாய்த்துறையினர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து துணை ஆணையர் வெங்கடேசன் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அண்ணா செட்டி மடம் பகுதியில் ரூ 10 கோடி மதிப்பிலான 14 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 1327 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டது என்று கோவில் நிர்வாகத்தினர் கூறி உள்ளனர்

More Stories
ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில்
தேனி மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் சரகத்தில் (16.06.2026) அன்று இலட்சலபட்டி கிராமத்தில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவ இடத்தை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு இக்கொள்ளை வழக்கின் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளார்.