May 6, 2026

பழனி அருகே  பெரியதுரை கருப்பண்ணசாமி கோவிலில் 250 ஆடுகள் வெட்டி பக்தர்களுக்கு அசைவ விருந்து 

பழனி மே 6 

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கோம்பைபட்டி  கிராமம். மலையடிவாரத்தில் உள்ள இந்த ஊரில் புகழ்பெற்ற பெரிய துரையான் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.  அதன் படி நேற்று  அதிகாலை 3 மணி முதல் கிடா வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சுமார் 250 ஆடுகள் வெட்டப்பட்டது. பின்பு கமகம வாசனையுடன்  சமையல் செய்யப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் வாழை  இலை போட்டு சுடச்சுட அரிசி சாதம் ஆட்டு இறைச்சி  கோழி வறுவல் மற்றும் கமகமக்கும் குழம்பு ஊற்றப்பட்டு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. சுமார் 10,000 பேர் விருந்தில் பங்கேற்றனர்.

Spread the love