பழனி மே 6
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கோம்பைபட்டி கிராமம். மலையடிவாரத்தில் உள்ள இந்த ஊரில் புகழ்பெற்ற பெரிய துரையான் கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன் படி நேற்று அதிகாலை 3 மணி முதல் கிடா வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் சுமார் 250 ஆடுகள் வெட்டப்பட்டது. பின்பு கமகம வாசனையுடன் சமையல் செய்யப்பட்டது. பின்பு பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் வாழை இலை போட்டு சுடச்சுட அரிசி சாதம் ஆட்டு இறைச்சி கோழி வறுவல் மற்றும் கமகமக்கும் குழம்பு ஊற்றப்பட்டு அன்னதான விருந்து வழங்கப்பட்டது. சுமார் 10,000 பேர் விருந்தில் பங்கேற்றனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்