தமிழக வெற்றிக்கழகம் கட்சி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்குமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வருகின்றன
முக்கிய அம்சங்கள்:
தவெகவிற்கு ஆதரவு ?
தமிழ்நாடு காங்கிரஸ் இன்று ஆலோசனை
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்குமா ? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகின்றது. தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. 108 இடங்களில் தவெக வெற்றிபெற்று இருக்கின்றனர். ஆனாலும் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் சில தொகுதிகள் தவெகவிற்கு சில ஆதரவு தேவைப்படுகின்றது. அந்த ஆதரவை காங்கிரஸ் கட்சியிடம் நாடியிருக்கின்றார் விஜய்.
தேர்தல் முடிவு வெளியானபோதே கண்டிப்பாக காங்கிரஸுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவார், அவர்களின் ஆதரவை கேட்பார் என கணிக்கப்பட்டது. அதன்படி விஜய் காங்கிரஸ் கட்சியிடம் பேசியிருக்கிறார். இதனை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் உறுதி செய்துள்ளார். மேலும் தலைமை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை இது குறித்து இறுதி முடிவை எடுக்குமாறு தெரிவித்து இருப்பதாகவும் கூறினார் கே.சி வேணுகோபால்.
ஆட்சியமைக்க உரிமை கோரி விஜய் கடிதம்..ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விளக்கம்
தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யட்டும் என டெல்லி தலைமை தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் தான் தவெகவிற்கு ஆதரவு தரலாமா ? இல்லையா ? என்பது குறித்து முடிவெடுக்கப்படுமாம்.
இந்த ஆலசோனை கூட்டம் முடிந்த கையோடு விஜய்க்கு ஆதரவு தருவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இன்று காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தருவார்களா ? இல்லையா ? என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் திமுகதலைவர் முக ஸ்டாலினுடன் நெருக்கமாக இருக்கின்றார் செல்வப்பெருந்தகை.
அப்படி இருக்கையில் அவர் தவெகவிற்கு ஆதரவு தரும் முடிவை எடுப்பாரா ? என்ற கேள்வி எழுகின்றது. மறுபக்கம் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் என்ன முடிவு செய்திருக்கின்றார்கள் என்பது குறித்தும் தெளிவாக தெரியவில்லை. ராகுல் காந்தி சில நிபந்தனைகளை விஜய்க்கு விதித்ததாக தெரிகின்றது. அப்படி நிபந்தனைகளை விதிக்கும் பட்சத்தில் விஜய்க்கு ஆதரவு தர முன் வந்து இருப்பதாகவே பொருளாகும்.
இல்லையென்றால் பேச்சுவார்த்தை துவங்கும் போதே ஆதரவு தர விருப்பமில்லை என சொல்லியிருப்பார்கள். அப்படி இல்லாமல் நிபந்தனை விதிக்கப்பட்டதால் காங்கிரஸ் தலைமை தவெகவிற்கு ஆதரவு தர முன் வருகின்றார்கள் என்றே தெரிகின்றது. ஒருவேளை காங்கிரஸ் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமா ? இத்தனை ஆண்டுகாலம் கூட்டணியாக இருந்தவர்கள் இதன் காரணமாக பிரிய கூடுமே ? இதற்கு ராகுல் காந்தி சம்மதிப்பாரா ? என்றும் கேள்விகள் ஏராளமாக உள்ளது.
இதுபோன்ற கேள்விகளுக்கு எல்லாம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் விஜய் நாளை முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதாக கூட செய்திகள் வருகின்றன. இதுகுறித்து நேற்றே ஆளுநருக்கு விஜய் கடிதம் அனுப்பியதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் காங்கிரஸ் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியமைக்க விஜய்க்கு ஆதரவு கொடுக்குமா ? நாளை விஜய்முகாமைச்சராக பொறுப்பேற்கிறாரா ? என்ற கேள்விகளுக்கு இன்னும் அதிகாரபூர்வமான விடை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
“காங்கிரஸ் முதுகில் குத்துவதாக திமுக பேசுவது புலம்பல்”: மாணிக்கம் தாகூர்
106 இடங்களில் தவிக்கும் விஜய் – சி.வி சண்முகம் தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் ஆதரவு!
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயலாற்றுவோம்: சீமான் உறுதி