March 14, 2026

பழனி முருகன் மலைக் கோவிலில் நடிகை அமலா பால் சாமி தரிசனம் செய்தார்

 பழனி மார்ச் 14

 பழனி முருகன் மலைக் கோவிலுக்கு  நேற்று பிரபல சினிமா நடிகை அமலாபால் வருகை புரிந்தார். முன்னதாக அவர்  அடிவாரத்தில் இருந்து புறப்பட்டு படிப்பாதை வழியாக நடந்து மலைக் கோவிலுக்கு சென்றார். பின்பு மலைக் கோவிலில் உச்சிக்கால  பூஜையில் கலந்துகொண்டு, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். பின்பு போகர் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்தார். பின்பு  ரோப் கார் வழியாக அமலாபால் அடிவாரம் வந்திறங்கி காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Spread the love