
இராமநாதபுரம் மாவட்ட பாசிட்டிவ் நெட்வொர்க் கூட்டமைப்பில் கூட்டு மாத்திரை (ART) சிகிச்சை பெற்று வரும் 40 எச்ஐவி பயனாளிகளுக்கு பாவை பவுண்டேஷன் சார்பில் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் இராமநாதபுரம்
பாசிட்டிவ் நெட்வோர்க் கூட்டமைப்பு தலைவர் முனீஸ்வரி தலைமையில்
பாவை பவுண்டேஷன் இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணகராஜ் முன்னிலையில் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டன. எச்ஐவி சிகிச்சையின் பயன்திறனை அதிகரித்து, உடல்நலத்தை மேம்படுத்தவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் இவ்வூட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
நெட்வொர்க் கூட்டமைப்பு தலைவர், திட்ட மேலாளர் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். பயனாளிகள் பாவை பவுண்டேஷன் நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்தனர்.

More Stories
ஊரெங்கும் மரக்கன்றுகளை நட்டு வைத்து விருதுநகரை பசுமையாக மாற்றும் ஆலமரம் அமைப்பு
விழுப்புரத்தில் களைகட்டிய ‘கூவாகம் திருவிழா – 2026’
தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது