
அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளன்று, முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி உட்பட அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள், அவைக்கு வரும்போதே ஆளும்கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது, அங்கிருந்த காவலாளிகள் மற்றும் போலீஸார் அவர்களை தடுத்தனர்.
இதுகுறித்து நேற்று பேரவை தலைவர் அய்யண்ணபாத்ருடு அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர், பேரவைக்கு கண்டிப்பாக வர வேண்டும்.
சில எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வருவதே இல்லை. சரியாக பேரவைக்கு வராத எம்.எல்.ஏக்களை திரும்ப பெறும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து