திமுக பொதுச்செயலாளர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை நிகழ்வில் அவர் பங்கேற்காத நிலையில், சபாநாயகர் அப்பாவு பேரவையில் துரைமுருகன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவரை மருத்துவமனையில் சந்தித்த சமயத்தில் பேசியவை பற்றியும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பகிர்ந்துள்ளார்.

திமுகவின் மூத்த நிர்வாகியும், பொதுச்செயலாளருமான துரைமுருகனுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேர்தல் சமயத்தில் அவரால் கட்சி பணியில் ஈடுபடாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையில் இன்று சட்டப்பேரவை நிகழ்வில் துரைமுருகன் கலந்துக்கொள்ளாத நிலையில், அவர் பற்றி உருக்கமாக பேசியுள்ளார் சபாநாயகர் அப்பாவு .
துரைமுருகன் குறித்து அவர் பேசுகையில், அவை நடவடிக்கைகள் காரசாரமாக நடைபெறும் போது நகைச்சுவையால், தனது புன்சிரிப்போடு கூடிய பேச்சில் அவையை குளிர வைத்த மாண்புமிகு முன்னவர் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவிப்பதோடு, மாண்புமிகு முதலைச்சர் கூறியதை போன்று அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் நேற்று முன்தினம் அவரை சந்தித்தேன். அப்போது என்னிடம் அவர் ஒரு கருத்தினை முன்வைத்தார்.
மன்னிப்பு கேட்ட துரைமுருகன்
சட்டமன்றம் அமைதியாக நடைபெறுகின்றதா? முதலமைச்சர் நன்றாக இருக்கிறார்களா? ஒன்றை நான் சொன்னதாக நீங்கள் சொல்ல வேண்டும். நான் சட்டமன்றத்தில் பேசிய வார்த்தைகளால், யாராவது மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று நான் சொன்னதாக சட்டமன்றத்தில் பதிவு செய்துவிடு என்று கூறினார். உண்மையில் அவர் சொன்னதை கேட்டு என் கண்கள் கலங்கி விட்டது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா.. கனிமொழி சொன்ன உறுதியான விஷயம்
அந்தளவுக்கு இந்த வயதிலும் பலமுறை சட்டமன்றத்தில் அதிகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் இந்தளவுக்கு சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் மீது மரியாதை வைத்துள்ளார். சில நேரங்களில் வேண்டுமென்ற இல்லாமல், வேடிக்கையாக பேசும்போது மனம் பாதிக்கப்பட்டு இருக்குமானால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று பதிவு செய்துவிடுங்கள் என்று சொன்னது உண்மையிலே அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது.
உருக்கமான பேச்சு
நம்முடைய தம்பி வேல்முருகன் சொன்னதை போன்று நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்துடைய கட்டுப்பாடுமிக்க தலைவர்களில் முதன்மையாக இருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு. அவர் எந்தளவுக்கு நமக்கு உறுதுணையாக இருந்தார் என்பது தெரியும் என்று அமைச்சர் துரைமுருகன் குறித்து உருக்கமாக பேசியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உரையில் துரைமுருகன் பேசினார். அவர் கூறுகையில், சட்டப்பேரவையில் கருத்து மோதல்கள் ஏற்படும் சமயத்தில் தன்னுடைய அனுபவத்தாலும், அறிவாற்றலாலும் எதிர்கொள்பவர் எனது அண்ணன் துரைமுருகன். அவர் இடுப்பு, எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைந்து உடல்நலம் பெற்று வர வேண்டும் என விரும்புகிறேன். இந்த நேரத்தில் அவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு துரைமுருகன் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
கதிர் ஆனந்த்
அவருடைய இந்த பேச்சு குறித்து துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் எம்பி தனது எக்ஸ் தளத்தில், சட்டப்பேரவையிலும், போராட்டக்களங்களிலும் சமரசமில்லாமல் உடன் நின்று களமாடிய வரலாற்றை பாசத்துடன் மாண்புமிகு முதலமைச்சர் சட்டப்பெவரையில் இன்று நினைவு கூர்ந்தது உள்ளபடியே நெகிழ்ச்சி அளிக்கிறது. எனது அரசியல் ஆசான் கழக பொதுச்செயலாளர் விரைவில் நலம் பெற்று, கொள்கைப் பணியை தொடர்வார் என பதிவிட்டுள்ளார்.

More Stories
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!
உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! – முதல்வர் மு.க. ஸ்டாலின்