
புதுடெல்லி: வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் அசாம் எல்லை வழியாக இந்தியாவுக்குள் அதிகளவில் ஊடுருவுகின்றனர். இவர்களை திருப்பி அனுப்புவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், அங்கு ஊடுருவல் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. எஸ்ஐஆர் பணியின் போது ஊடுருவல்காரர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களது பெயர் நீக்கப்படுகின்றன.
இந்நிலையில் வரும் 20-ம் தேதி அசாம் மாநிலத்தின் சசார் மாவட்டத்தில் உள்ள நதன்பூர் கிராமத்துக்கு அமைச்சர் அமித் ஷா வரும் 20-ம் தேதி செல்கிறார். இங்குதான் சட்டவிரோத குடியேறிகள் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறுநாள் சர்வதேச எல்லைப் பகுதி அருகே அமைந்திருக்கும் நதன்பூர் கிராமத்துக்கு சென்று அங்கு நடைபெறும் பல்துறை மேம்பாட்டு நிகழ்ச்சிகளில் அமித் ஷா பங்கேற்கிறார். இங்கு பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் அசாம் போலீஸார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து