February 7, 2026

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்களை வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” இணையதள சேவையைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் வ. சங்கரநாராயணன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Spread the love