ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அயோடின் கலந்த உப்பின் அவசியம், அதன் உடல்நல நன்மைகள், உணவு பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் இப்ராஹிம், பள்ளித் தலைமை ஆசிரியை அருட்செல்வி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்களிடம் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினருக்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

More Stories
பெரியகோட்டை கிராமத்தில்அனுமதியில்லாமல் விவசாய நிலத்தில் தார்சாலை அமைக்க கூடாதுமாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியிடம் விவசாயிகள் கோரிக்கை…..
ஒட்டன்சத்திரத்தில்பொதுமக்களுக்கான விழிப்புணர்வு இரட்டையர் இறகுபந்து போட்டி..
பழனி தண்டபாணி சுவாமி மடம் நிலம் பத்திரப்பதிவு மோசடிசார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.