கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள்
திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 90+ தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் இக்கூட்டணி கேரளாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி, ஐக்கிய ஜனநாயக முன்னணி 92 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 42 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 இடத்தில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை இந்த தேர்தலில் பிரதான அணிகளாக களமிறங்கின.
மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.
இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகள் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 15,465 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
காலை 11 மணி நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 93 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 42 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறது.
அருதிப் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90க்கும் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது.

More Stories
தொடர்ந்து முன்னிலையை நோக்கி தவெக.. விஜய் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு!
வெற்றி நமதே: காலையிலேயே பூங்கொத்துடன் விஜய் வீட்டிற்கு வந்த ஜோதிடர் ரதன் பண்டிட்
தவெக வேட்பாளர்களுக்கு ரகசிய கண்காணிப்பு.. கட்சி தாவலை தடுக்க .. விஜய் அதிரடி நடவடிக்கை!