
புதுடெல்லி: காமன் காஸ் அமைப்பு தாக்கல் செய்த பொது நல மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
காமன் காஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, “தேர்தலின்போது கட்சிகள் பண பலத்தை பயன்படுத்துவது ஜனநாயகத்தை பாதிக்கிறது. தேர்தல் செலவின கட்டுப்பாடுகள் இருந்தாலும் அது வேட்பாளருக்கு மட்டுமே பொருந்துவதாக உள்ளது” என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், பொதுநல மனு குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

More Stories
“அப்பாவிகளை கொல்ல எந்த மதமும் அனுமதிப்பதில்லை” – குல்காம் படுகொலைக்கு உமர் அப்துல்லா கண்டனம்
இந்திய இளைஞர்களுக்கு தேவை வேலை வாய்ப்பு… ரீல்ஸ் அல்ல: காங்கிரஸ்
“இது ஒரு தொடக்கம்” – பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பிரியங்கா கருத்து