May 14, 2026

பழனியில் பிராமண சமாஜம் சார்பில் கண்டனம் 

பழனி மே 14 

பழனியில் தமிழ்நாடு பிராமண சமாஜம் நிறுவன தலைவர் என் ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது. சனாதன தர்மம் என்பது நம் பாரம்பரியத்தின் அடித்தளமாக இருந்து அறம் ஒழுக்கம் மனிதநேயம் பரஸ்பரம் மரியாதை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. அதை ஒழிக்க வேண்டும் என்று சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசியது கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் ஆகும். சட்டசபை என்பது மக்கள் நலனுக்காக விவாதிக்க படும் இடம். அது மதங்களை தாக்கும் மேடை அல்ல. உதயநிதியின் கருத்தை தமிழ்நாடு பிராமண சமாஜம் கடுமையாக கண்டிக்கிறது.  அரசியல் தலைவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். மத ஒற்றுமையை காக்கும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Spread the love