பழனி பிப்ரவரி 13
பழனி முருகன் கோவிலில் படிப்பாதை, யானை பாதை ஆகிய பகுதிகளில் பக்தர்களின் பொருட்கள் மற்றும் கோயிலுக்கு வந்து காணாமல் போனவர்கள் பற்றிய விவரம் அடிக்கடி கோயில் ஒலி பெருக்கியில் ஒலி பரப்பப்படும். இந்நிலையில் யானை பாதையில் வந்த ஒரு வாலிபர் த.வெ.க தலைவர் நடிகர் விஜயின் பாடலை ஒலிக்கச் செய்தார். இதனால் பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் யானை பாதையில் மைக் செட் உள்ள ஒரு இடத்தில், ஒரு வாலிபர் தனது செல்போனில் இருந்த விஜய் பாடலை மைக் மூலம் ஒலி பரப்பு செய்தார். அதை மற்றொரு நபர் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பரப்பி விடுகிறார். இது பற்றி கோயில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்