May 22, 2026

ராமநாதபுரம் மாவட்டம்  உலகப் புகழ்பெற்ற ஏர்வாடி தர்கா கொடி இறக்க விழாவில், சுமார் 9 ஆயிரம் கிலோ உணவு யாத்திரிகர்களுக்காக தயாரிக்கப்பட்டது. இந்த பிரம்மாண்ட சமையல் பணியை சமையல்கலை நிபுணர் எஸ்.புஹாரி திறம்பட மேற்கொண்டார்.

யாத்திரிகர்களுக்கு தர்கா நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட இந்த உணவு, சுவை மற்றும் தரத்தில் சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, “இத்தனை பெரிய அளவில் சமைக்கப்பட்ட உணவு மிகவும் சுவையாக இருந்தது” என யாத்திரிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு நிர்வாகத்தின் சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சமையலில் அனுபவமும், சுவையில் தனித்துவமும் கொண்ட “சேகு தம்பி கேட்டரிங்” தற்போது கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கைக்குரிய கேட்டரிங் சேவையாக உருவெடுத்து வருகிறது.

Spread the love