பழனியில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய மாவட்ட தலைவர் சாமிநாதன் அவர்களின் அறிமுக கூட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் அவருக்கு காமராஜ் தேசிய பேரவை சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நகரத் தலைவர் முத்துவிஜயன், மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம், மண்டல தலைவர் வீரமணி, காமராஜ் தேசிய பேரவை பாப்புச்சாமி, முன்னாள் நகர்
மன்ற உறுப்பினர் சுந்தர், நகர இளைஞரணி தலைவர் பாலகுமார், சிறுபான்மை பிரிவு முகமது அலி, ராமநாத கிருஷ்ணன், நகர் மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம், நகர் வட்டார சார்பில் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பழனி to ஈரோடு ரயில்வே திட்டத்தையும், மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
31.01.26

More Stories
நீலகிரியில் ரூ.2.59 கோடி பணம், தங்கம் பறிமுதல்.. சுற்றுலா செல்பவர்கள் கவனமுடன் செயல்பட எச்சரிக்கை!
போத்தனூர் – கரூர் புதிய ரயில் பாதை: சேலம் கோட்டத்திற்கு பயணிகள் சங்கம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!
திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் ஆய்வு செய்த புகைப்படம்