அகர்தலா: திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் 4,000் வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட உனகோடி மாவட்டத்தில் மட்டும் 6,068 பேர் 35 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தலாய் மற்றும் கோவாய் பகுதிகளில் மேலும் 4,909 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

More Stories
நடைபாதை கடை என்பதற்காக இழப்பீட்டை குறைக்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர் வருகைக்கு எதிர்ப்பு: பெங்களூரு தேசிய சட்டப் பல்கலை. 34-வது பட்டமளிப்பு விழா ரத்து
தமிழக முதல்வர் விஜய் பிரதமராக 9.2% பேர் ஆதரவு