கிவ்: ரஷ்ய ஏவுகணைகளை வீழ்த்த பிரேயா என்ற பெயரில் புதிய கேடயத்தை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. உக்ரைன் -ரஷ்யா போர் 5 ஆண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே அண்மையில் 30 ஆயிரம் வடகொரிய ராணுவ வீரர்களை ரஷ்யா தனது நாட்டுக்குள் அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்நிலையில் ரஷ்ய ஏவுகணைகளை வீழ்த்த பிரேயா என்ற பெயரில் புதிய கேடயத்தை உருவாக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. புதிய பிரேயா கேடயத்தை 2027-ம் ஆண்டுக்குள் தயாரிக்க உக்ரைன் முடிவு செய்துள்ளது. பிரேயா கேடயத்தை தயாரிக்க உக்ரைனுடன் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 10 ஐரோப்பிய நாடுகள் கைகோர்த்துள்ளன.

More Stories
வாட்ஸ்அப் கணக்குகளை ‘ரிவ்யூ’ செய்யும் மெட்டா: பாதிக்கப்பட்ட பயனர்கள் புகார்
AI வளர்ச்சி: மனிதகுலத்திற்கு வரமா? சவாலா? – எலான் மஸ்க் எச்சரிக்கை
Itel Zeno 100 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்