
புதுடெல்லி: இந்திய செய்தித்தாள் சங்கம் (ஐஎன்எஸ்) தலைவர் விவேக் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் செய்தித்தாள் காகிதத் தேவை ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக உள்ளது.
ஆனால், உள்நாட்டில் இதன் உற்பத்தி 5 லட்சம் டன்னை தாண்ட முடியாமல் திணறி வருகிறது. இதன் மூலம் மொத்த செய்தித் தாள் காகிதத்துக்கான தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே நம்மால் ஈடு செய்ய முடிகிறது.
கடந்த 2 தசாப்தங்களுக்கும் மேலாக இந்த இடைவெளி நீடித்து வருகிறது. செய்தித்தாள் காகித உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவோ அல்லது விரிவாக்கம் செய்யவோ எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
எனவே, செய்தித்தாள் காகிதங்கள் இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள 5% சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
“நட்பு தினத்தை போல் கைத்தறி நாளையும் கொண்டாடுங்கள்” – பிரதமர் மோடி வேண்டுகோள்
“ஒன்றுபட்ட குரல்கள் ஒலிக்கும்போது மட்டுமே இந்த அரசு பணியும்” – ராகுல் காந்தி
எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் – முக்கிய அம்சம் என்ன?