அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் தலைமை வகித்தார். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றது.மேலும் இந்த கலைநிகழ்ச்சி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளி உதவி தலைமையாசிரியர் செல்வராஜ், ஆசிரியர்கள் கென்னடி, சக்தி, சுரேஷ், ஜமின்தார், அர்ச்சுனன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கனிமொழி, உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
கொடைக்கானலில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் தவிப்பு
மாவட்ட தோதல் அலுவலா்-மாவட்ட ஆட்சியா் அவா்கள் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள் பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்ட புகைப்படம்
கொள்ளிடம் பேருந்து நிறுத்தத்தின் அவல நிலை: அடிப்படை வசதிகள் வேண்டி பயணிகள் அவசரக் கோரிக்கை!