April 2, 2026

இராசிபுரம்:நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பழைய பஸ்நிலையம் பகுதி அரசமரத்து விநாயகர் கோவில் அருகில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக ராசிபுரம் தொகுதிக்கான திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தை அமைச்சர் மா.மதிவேந்தன் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும்,மாநிலங்களவ உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஸ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் திமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என 200க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் ராஜேஷ்குமார் பேசுகையில் திமுக அரசின் ஐந்தாண்டு சாதனைகள் குறித்தும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும் பேசினார்.

Spread the love