நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக களம் காணும் மா மதிவேந்தன் ராசிபுரம் பகுதியில் உள்ள தூய லூர்து அன்னை ஆலயம் மற்றும் இமானுவேல் ஆலயத்தில் கிறிஸ்துவ மக்களிடம் தனக்கு வாக்கு செலுத்துமாறு கேட்டுக் கொண்டு அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் .
தொடர்ந்து தேவாலயத்தில் பிரார்த்தனை செய்த மா. மதிவேந்தனுக்கு சிறப்பு பிரார்த்தனையுடன் ஆசீர்வாத கூட்டமும் நடைபெற்றது .
சிறுபான்மை மக்களின் முழு பாதுகாப்புக்கு திமுக என்னாளும் பாடுபடும் என கூறி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா மதிவேந்தன் வாக்காளர்களிடம் திமுகவின் சாதனைகளை துண்டறிக்கையாக வழங்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது