April 27, 2026

தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் அரசின் நலத்திட்டங்களை தடையின்றி பெறுவது மற்றும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் சார்பில் நடைபெற்றது.

தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் அரசின் நலத்திட்டங்களை தடையின்றி அனைவரும் பெறுதல் மற்றும் பெண்களுக்கு அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அதன் பயன்களை அறிவது போன்ற அரசின் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்தான விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டம் திருப்பூர் மங்கலம் சாலை திருவள்ளுவர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிர்வாகிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் உரையாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் லதா. நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி. முன்னிலை நெடுஞ்செழியன். முகமது ஆதில். நசீர் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்

Spread the love