அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டும். இன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் (எம் சி மேல்நிலைப் பள்ளி) முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவர் கே. கிஷோர் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர் எம். சுல்தான் ரகீம் இருவருக்கும் பள்ளி வளாகத்தில் இன்று பிற்பகல் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் சால்வை அணிவித்து, கல்வி ஊக்கத்தொகை வழங்கி, பரிசும் கொடுத்துப் பாராட்டினார். மதுரைக் கல்லூரி வாரியக் குழு உறுப்பினர் தாம்பிராஸ் இல. அமுதன் தலைமையில் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் பி. பாலாஜிராம், உதவித் தலைமை ஆசிரியர்கள் என். வெங்கடசுப்பிரமணியன், பி.மகேஸ்வரன் முன்னிலை வகித்தனர். இரண்டு மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். வாழிய பேராற்றல் வாழியவே. பள்ளித் தாளாளர் மூத்த வழக்கறிஞர் எஸ். பார்த்தசாரதி என்பது கூடுதல் சிறப்பு. கல்வியால் மேலும் உயர்நிலை பெற்றிட வாழ்த்தும் பாராட்டும்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டும்

More Stories
பிளஸ் 2 பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26% தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 95.2% பேர் தேர்ச்சி
நேர்காணல் இல்லாத தொழில்நுட்ப பணிகள் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு மே 11-ல் ஆரம்பம் – டிஎன்பிஎஸ்சி