வ.உ.சி நகர், சிவஞானபுரம், மகாசக்தி நகர், சக்கரக்கோட்டை, சேதுநகர், பசும்பொன் நகர், கூரியூர், அச்சுந்தவையில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு தோறும் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, ஜோதி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சைனா பாஸ்கர் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சி.ஆர் குமார் ஆகியோரின் ஏற்பாட்டில்
வேட்பாளர் கீர்த்திகா முனியசாமிக்கு ராட்சத ஆப்பிள் மாலை அணிவித்து, தாரை தப்பட்டை முழக்கத்துடன் பூமாலை பொழிந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் தேர்தல் களத்தை உற்சாகமாக மாற்றியதுடன், அதிமுகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

More Stories
இராசிபுரம்:நன்றி மறக்க மாட்டோம்: உங்களுக்கே எங்கள் ஓட்டு… உழவர் சந்தையில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட மதிவேந்தனுக்கு மக்கள் கொடுத்த மகிழ்ச்சி செய்தி…
இளைஞர்களான விளையாட்டு அரங்கம்:
இராசிபுரம்:தேவாலயங்களில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் மா.மதிவேந்தன்… சிறப்பு பிரார்த்தனையுடன் ஆசிர்வாதம்.