வ.உ.சி நகர், சிவஞானபுரம், மகாசக்தி நகர், சக்கரக்கோட்டை, சேதுநகர், பசும்பொன் நகர், கூரியூர், அச்சுந்தவையில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு தோறும் சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது, ஜோதி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சைனா பாஸ்கர் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சி.ஆர் குமார் ஆகியோரின் ஏற்பாட்டில்
வேட்பாளர் கீர்த்திகா முனியசாமிக்கு ராட்சத ஆப்பிள் மாலை அணிவித்து, தாரை தப்பட்டை முழக்கத்துடன் பூமாலை பொழிந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு அந்த பகுதியில் தேர்தல் களத்தை உற்சாகமாக மாற்றியதுடன், அதிமுகவிற்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.