சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு வி்ண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 1 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுவரை 2 லட்சத்து 24 ஆயிரத்து 034 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் விண்ணபிக்கத் தவறும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்கள் ஜூன் 1-க்கு பிறகும் விண்ணப்பிக்கலாம் என்று அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணைய தளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

More Stories
தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கியது
துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்
10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆக.12 முதல் விநியோகம்