உலகத் தாய்மொழி நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு குறித்து…

முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
உலகத் தாய்மொழி நாளையொட்டி, “தமிழே நீ வாழ்ந்திடு” என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகத் தாய்மொழி நாளையொட்டி, முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது.
தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி!
நம் தமிழைக் காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு! என கூறியுள்ளார்.

More Stories
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!
மருத்துவமனையில் இருக்கும் துரைமுருகன் சொன்ன வார்த்தை.. கண் கலங்கி விட்டேன்.. சபாநாயகர் அப்பாவு உருக்கம்