பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட 4 பேர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டபேரவையில் உள்ள எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காங்கிரஸுக்கு 3 இடங்களும், பாஜகவுக்கு 1 இடமும் கிடைக்கும்.
காங்கிரஸ் சார்பில் கட்சியின் தேசிய தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மூத்த நிர்வாகிகள் பவன் கேரா, மன்சூர் அலி கான் ஆகியோரும் பாஜக சார்பில் பேரா.நாகராஜும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேறு வேட்பாளர்கள் யாரும் போட்டியிடாததால் நால்வரும் எளிதாக வெற்றி பெறும் நிலை உருவானது.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை செயலாளர் விசாலாக் ஷி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடகாவில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்லை. எனவே, மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலிகான், நாகராஜ் ஆகிய 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

More Stories
“தமிழக வேளாண் பட்ஜெட் திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட ‘வெற்றி’ லேபிள்” – மு.க.ஸ்டாலின்
அஞ்சலையம்மாள், நம்மாழ்வார் பெயர்களில் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசுடன் விருது
காட்டுப்பன்றிகள் சேதத் தடுப்பு திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு