May 22, 2026

திண்டுக்கல்லில் பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்*

திண்டுக்கல்லில் பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்* திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வேகக்கட்டுப்பாடு, அவசரகால வழிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் முதலுதவி பெட்டிகள் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் (Speed Governors), சிசிடிவி கேமராக்கள் மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்டவை முறையாக இருக்கிறதா என பார்வையிட்டார். அனைத்து வாகனங்களிலும் தீயணைப்பு சிலிண்டர் (Fire Extinguisher) மற்றும் முதலுதவி பெட்டி இருப்பதை உறுதி செய்தார். தீ விபத்துகள் ஏற்பட்டால் எவ்வாறு அவற்றை கட்டுப்படுத்துவது என்று தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் அளித்தனர்

Spread the love