சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன்– கோப்புப்படம்
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக – விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திங்கள்கிழமை நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலர் ரவிக்கோர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கடந்தமுறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக இம்முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேச்சுவார்த்தையின்போது கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற 4 தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளின் பட்டியலை விசிக வழங்கவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என கட்சிகளின் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்ட திமுக, கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளுக்கு தொகுதிகளையும் ஒதுக்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கின்றோம் : முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த மதிமுக எம்.பி துரை வைகோ