திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப் பிள்ளையாருக்கு தலா 75 கிலோ எடையில் 150 கிலோ கொழுக்கட்டை நைவேத்தியம் படைக்கப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டையில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள மாணிக்க விநாயகருக்கும், மலைமேல் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ எடையில் 150 கிலோ கொழுக்கட்டை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று தயார் செய்யப்பட்டு படைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கொழுக்கட்டை தயார் செய்யும் பணி கடந்த 13-ம் தேதி காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 75 கிலோ கொழுக்கட்டை மாணிக்க விநாயகருக்கும், 75 கிலோ கொழுக்கட்டை உச்சிப் பிள்ளையாருக்கும் காலை 9 மணிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் இந்தக் கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

More Stories
விழாக்கோலம் பூண்டது மதுரை மாநகரம் – மீனாட்சி அம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு கோலாகலம்
இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சார்பில் சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நாளை தொடக்கம்
‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷம் முழங்க திருச்செந்தூர் ஆவணி தேரோட்டம் கோலாகலம்