மார்ச் 13
திருப்பூர் மாவட்டம் அவினாசி தேவராயன் பாளையம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் ஜோதிமணி தம்பதியினர். பிரேம்குமார் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் பிரேம்குமாருக்கு சொந்தமான 3 1/2 ஏக்கர் வீடு மற்றும் தோட்டத்தை இவரது மனைவி ஜோதிமணி தற்போது பராமரித்து வருகிறார் இந்நிலையில் ஜோதிமணி
யின் உறவினரான பிரகாஷ்., ரித்திக்., இருவரும் சேர்ந்து ஆளுங்கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகியான செந்தில் மற்றும் இவரது ஆதரவாளர்கள் என 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் ஜோதி மணியின் தோட்டம் மற்றும் வீடு அமைந்துள்ள இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜி.சி. பி பியந்திரத்தை கொண்டு காம்பவுண்ட் சுவரை இடித்தும்., தோட்டத்திலிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளனர். திமுக நிர்வாகி அடியாட்களுடன் தோட்டத்திற்குள் நுழைந்து சுவர்களை இடித்து சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஜோதிமணி தன் கணவர் இல்லாததால் சொத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் தனது உறவினரானபிரகாஷ்., ரித்திக் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகி செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிசிடிவி ஆதாரங்களுடன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் .தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து காம்பவுண்ட் சுவர்களை இடித்து தென்னை மரங்களை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

More Stories
பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் சாலை மறியல்! ஆறுமுகநேரி .மார்.14 தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஆறுமுகநேரியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு மாற்றுதிறனாளி வாக்காளர்கள் வாக்களிக்க அனு கதக்க சூழலை அமைத்து தருவதற்காக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான மாட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் தாவூதிய போரா முஸ்லிம்கள் சார்பாக அப்பாஸ் ஏற்பாட்டில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு ரமலான் மாதத்தை முன்னிட்டு பிரியாணி வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான தாவூதிய போரா முஸ்லிம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.